இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பைப் பாதுகாக்கும் வகையிலான இண்டர்நெட் பாதுகாப்புப் படைப் பிரிவு விரைவில் உருவாக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார்.
கேரள மாநிலம் கன்னூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஏற்கெனவே இருக்கும் சைபர் பாதுகாப்பு பிரிவைவிட மேம்பட்ட வகையில் புதிய படைப்பிரிவு இருக்கும் என்று கூறினார்.
இந்தியாவின் தொலைத் தொடர்பு வலையமைப்புகளை சிதைப்பதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகக் தகவல்களை வந்திருப்பதால், இந்த நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.