சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற்று வருபவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி/ எச்.எஸ்.சி/ பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.06.13 தேதியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-4, சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.